இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனது வழக்கறிஞர் ஊடாக தாக்கல் செய்துள்ள குறித்த பெண்ணை மனுவின் பிரதிவாதியாக இரகசிய பொலிஸ் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பொலிஸார் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.