எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவராக, சபநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனவரி 03ஆம் திகதி சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனவரி 03ஆம் திகதிக்கு முன்னதாக, சபை முதல்வர் மற்றும் ஆளும் தரப்பின் பிரதம கொரடா ஆகிய பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.