சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்து, அதிக விலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.