முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மோசன் மனு மீளப்பெறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குள்ளான வெள்ளை வேன் தொடர்பான ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் கடந்த 24 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள போதும் இதுவரை அவரை கைது செய்ய முடியவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.