யாழ். தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றையதினம் (26.12.2019) காலை 11.00மணியளவில் அறிநெறிப் பாடசாலையின் தலைவி தபோதினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி பிரதேச சபையின் உப தவிசாளர் செ.மயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், திரு. தேவன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலயின் ஆசிரியர், நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்  கலந்துகொண்டிருந்தார்கள்.