Header image alt text

கடந்த வருடத்தில் 51 ஆயிரத்து 659 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்ததால் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிதொகையை வங்கியில் வைப்பிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தவகையில் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் இணையதளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

கொழும்பு கோட்டையில் இரந்து தலைமன்னமார் வரை செல்ல உள்ள தபால் புகையிரதத்தை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகையிரதமானது தினமும் இரவு 7.15க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விண்ணப்பதாரருக்கு SMS மூலமாக அறிவிப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. Read more

தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சேலம் மற்றும் மண்டபம் முகாமில் தங்கியிருந்த நான்கு அகதிகள் இன்று இலங்கையை நோக்கி சட்டவிரோதமாக படகில் இலங்கையை நோக்கி வந்தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. Read more