அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (31) காலை சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை அடுத்து அவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வௌ்ளை வேன் ஊடகவியளாலர் சந்திப்பு குறித்த சந்தேக நபராக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.