குவைத்துக்கு வேலைவாய்ப்பிற்காக சென்று அந்நாட்டில் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்து பின்னர் அந்நாட்டு தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்கள் 36 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அந்நாட்டில் வைத்து தங்களது வீட்டு எஜமான்களினால் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் விஷேட கரிசனையின் அடிப்படையில் குறித்த பெண்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.