வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் திருமதி.பி.எம்.எஸ் சார்ல்ஸ் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று பிற்பகல் 1மணியளவில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

புதிய ஆளுநரை வரவேற்பதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்,வட மாகாண ஆளுநராக கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக சேவையாற்றிருந்தார்.