இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி. சங்கக்கார தெரிவித்துள்ளார்.

புதிய வீதி வரைபடத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வங்கி மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய பொது இடங்கள் தொடர்பான தகவல்கள் அந்த இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் புதிய வீதி வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இலங்கையின் வீதி வரைபடம் இறுதியாக 2014 ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)