Header image alt text

பசறை – மடுல்சீமை வீதியில் 06ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. தற்போதுவரை, 70 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. Read more

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார். அதன்போது, ‘இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும். Read more

செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 வெளிநாட்டு பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கு அமைய செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 06 மணிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியர்கள் 82 பேர், பாகிஸ்தானியர்கள் 12 பேர், மாலைத்தீவு பிரஜைகள் 10 பேர், Read more

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன ஏற்பாடு செய்திருந்த வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்றுஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

யாழிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த ரயிலில் நேற்றிரவு மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியா தேக்கவத்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலியானவர் கூமாங்குளத்தில் வசிக்கும் 36 வயதுடைய வாசன் என்பவராவார். Read more

முல்லைத்தீவு முறிகண்டியில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஐந்து வெளிநாட்டவர்களை ஹிக்கடுவ, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹிக்கடுவ-மில்லகொடவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. Read more

வவுனியா, மகாறம்பைகுளம் புளியடி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த மூதாட்டியை காணாததால் உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அன்னலட்சுமி (வயது 85) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more