போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, நாடு முழுவதும் செயற்படும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் சமர்ப்பித்தல் மற்றும் வயது குறைந்தவர்களை வெளிநாட்டு தொழிலுக்கு ஈடுபடுத்தல் ஆகிய விடயங்களுக்கு உதவும் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை சுற்றிவளைத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.