குற்றச்செயல்களின் ஈடுபடுவோர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுக்கள், திட்டமிட்ட குற்றச் செலயல்களில் ஈடுபடுவோர், கப்பம் பெறுவோர், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார். 24 மணித்தியாலங்களும் தகவல்ளை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
011 2580518 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 011 2588499 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியும். மேலும், commadantstf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் முறைப்பாடு செய்ய முடியும். தகவல் வழங்கும் நபர்கள் தொடர்பான இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.