வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில், இன்று அதிகாலை நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞன் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில், மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பா. நிரோஜன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை அவ்வீதியால் பயணித்த வாகனங்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.