Header image alt text

கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்கிறார் சித்தார்த்தன்

(தி.சோபிதன்)

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக இருந்தால் பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகளில் ஜனாதிபதி வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள், அவருடைய நிலைப்பாடுகள், செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, Read more

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் உள்நாட்டு விவகார அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நேற்று காலை இலங்கையை வந்தடைந்த அமைச்சர் கே.சண்முகம், அலரி மாளிகையில் வைத்து பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் பெப்ரவரி 6ம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவில் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் நேற்றிரவு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி திகிளிவெட்டை பிரதேசத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் ரவிச்சந்திரன் (வயது 43) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பிரதேசத்தில் தனக்குச் செந்தமான வயலில் இரவு காவலுக்காக நேற்று இரவு சென்ற வேலையே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினம் அனுஷ்டிப்பிற்கு சுதந்திர கட்சியால் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சந்திரிகா என்று கூறினாலே அனைவரும் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபில்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 121 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலை காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். Read more

திறைசேரியின் தேசிய பாதீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலுக்ஷான் நேற்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக

நிதி, பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூட் நிலுக்ஷான் முன்னதாக தேசிய பாதீட்டு திணைக்களத்தின் உதவி பணிப்பாளராகவும், ஸ்ரீலங்கா சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38) என்ற இளைஞர்

கடந்த மார்கழி 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்டபோது அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

நடைமுறையில் உள்ள புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணையை இந்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை புகையிரத சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள புகையிரத சேவைகளின் கால அட்டவணையின்படி வெள்ளிக்கிழமை மாலை 5.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி பயணிக்கும் 1033 இலக்கமுடைய புகையிரத இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. Read more