இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் உள்நாட்டு விவகார அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நேற்று காலை இலங்கையை வந்தடைந்த அமைச்சர் கே.சண்முகம், அலரி மாளிகையில் வைத்து பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.