தற்போது நடைமுறையில் உள்ள இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இந்திய கடன் உதவி நடைமுறையின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பஸ்களை கொள்வனவு செய்தல்

இந்திய கடன் ஆலோசனை முறையின் கீழ் 15.03 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 50 தொடக்கம் 54 ஆசனங்களைக் கொண்ட 400 புதிய பஸ்களையும் 32 – 35 ஆசனங்களைக் கொண்ட 100 புதிய பஸ்களையும் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்கிடையில் இலங்கை போக்குவரத்து சபையினால் பொதுமக்களுக்கு செயல்திறன் மிக்க மற்றும் வசதிகளைக் கொண்ட போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்காக தனது தேவையை மீண்டும் மதிப்பீடு செய்து நீண்ட தூர பயணம், நகர மற்றும் கிராமிய பிரதேசங்களில் உள்ள முக்கிய வீதிகளைப் போன்று கிராமிய பிரதேசத்தில் குறுக்கு பாதைகளில் பயன்படுத்தக் கூடிய பஸ் வகைகள் மற்றும் தேவையின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்திய கடன் திட்ட முறையின் கீழ் இதற்கு முன்னர் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட பஸ்களுக்குப் பதிலாக 30 – 35 புதிய 500 பஸ்கள் மற்றும் விநியோகிக்கப்படும் உயரத்தைக் கொண்ட 42 – 45 ஆசனங்களைக் கொண்ட புதிய 100 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)