உயர் தரம் சித்தியடைந்த அனைவருக்கும் 60 நாட்களுக்குள் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.