புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் ஆரம்பமான ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வீசப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போத்தல்கள் சேகரிக்கப்பட்டதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.  (அரசாங்க தகவல் திணைக்களம்)