அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

19வது திருத்தச்சட்ட மூலத்துக்கமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம், நீதித்துறை உள்ளிட்டவற்றின் உயர் பதவிக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானத்தை அரசியலமைப்பு பேரவையே எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.