இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள், தங்களது நாட்டுக்கு அனுப்பிவைத்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, அந்த நாடுகளுக்கு மீள அனுப்பிவைக்க உள்ளதாக மலேசிய நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் யெவோ பீ யின் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டை கழிவுகளை வெளியேற்றும் இடமாக்குவதற்கு சில நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி கனவு மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதியை சீனா கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுத்தியதை அடுத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இருந்து கழிவுகள் வர தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.3737 மெற்றிக் டொன் பிளாஸ்டிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களில் பிரான்ஸூக்கு சொந்தமான 43 கொள்கலன்கள், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துககு சொந்தமான 42 கொள்கலன்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான 11 கொள்கலன்களும் அடங்குகின்றன.

அத்துடன் எஞ்சிய கொள்கலன்கள் ஜப்பான், சிங்கப்பூர், போர்த்துக்கல், லித்துவெனியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளால் அனுப்பபட்டதாக மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.