ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக

இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல்செய்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களினால் அதற்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்காக குறித்த வழக்கை இம்மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த நீதிபதி குறித்த வழக்கை இம்மாதம் 24ம் திகதி விசாரணைக்க எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பணம் வழங்கியது மற்றும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என்று தெரிவித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.