ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகன் மூவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மேற்படி தாய் உயிரிழந்துள்ளதுடன் மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் நேற்றுமாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் தாயாரான நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மகள் சிவலக்சன் கீர்த்திகா (வயது-35), மருமகன் சிவபாலன் சிவலக்சன் (வயது-35) ஆகியோர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடன் தொல்லையே தற்கொலை முயற்சிக்கு காரணமென தெரியவருகிறது. சாவகச்சேரி பொலிஸார் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.