Header image alt text

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றுமதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த 29வயதான பேருவளையைச் சேர்ந்த காஞ்சனா என்ற யாழ். பல்கலையின் மருத்துவபீட மாணவிக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் Read more

புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி மலேசியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், மலேசிய அரசியல்வாதிகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்றவருமான வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில் வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் பாரிய அளவில் கிடைத்து வருகின்றது. அரச அதிகாரிகள் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். Read more

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பிரபல தேயிலை ஏற்றுமதியாளர்

ரொஹான் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

காணி உரிமங்களை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் தீர்மானித்துள்ளது.

காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்துள்ளார். Read more

குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி நாட்டு பிரஜை ஒருவரிடம் குறித்த நபர் இலஞ்சம் பெற முயன்றுள்ளபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5000 ஆயிரம் ரூபாவினை பெற முற்பட்ட போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். Read more

பிணைகள் பரிமாற்று ஆணைக்குழுவின் தலைவராக

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிவாரம் பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கியை மீட்ட விசேட அதிரடிப்படையினர் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். Read more