Header image alt text

நல்லாட்சியின் நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் நாட்டை விட்டுச் செல்லவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, இந்த அரசாங்கம் பதவியேற்று 60 நாள்களில் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

முதல் முறையாக இலங்கையில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்றையதினம் திறக்கப்படவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடத்தின் அனுசரணையில் இந்த மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். Read more

கடந்த இரண்டு நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள், இன்று தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த பணி புறக்கணிப்பில் இன்றைய தினம்வரை தமக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.