கிளிநொச்சி-முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளர் மற்றும் பஸ்ஸில் பயணித்த 09 பயணிகள் உட்பட 11 பேரே காயமடைந்த நிலையில் வட்டக்கச்சி வைத்தியசாலையில் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.