வவுனியா, கற்பகபுரம் பகுதியில் நேற்றுக்காலை தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் எம்முடன் ஒன்றாக இருந்து உணவருந்தினார். அதிகாலை 5.00 மணி அளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கினோம் என முதியவரின் மகள் தெரிவித்தார்.

முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில் டோச் லைட் உள்ளதுடன் தூக்கில் தொங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும் முதியவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில்,

குற்ற தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளுக்காக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படும் சடலம் மீட்கப்படாமல் தூக்கில் தொங்கிய நிலையிலேயே காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.