கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள இருமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டினுள் இருந்த 79 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவலை-கல்கிசை மாநகர சகையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.