Header image alt text

பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கமைய இங்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார். இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி சந்திக்கவுள்ளார். Read more

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையினை குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்துள்ளனர். அத்துடன் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பின் அவசியத்தையும் இரா சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் விமான பயணிகளை விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. (அரசாங்க தகவல் திணைக்களம்)

இலங்கையில் கொரன்னா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய பின்வருவோர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சர் நியமித்துள்ளார்.

1.ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
2.பத்ரானி ஜயவர்தன, சுகாதார செயலாளர்.
3. டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.
4. மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ். Read more

வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

வூஹான் மாகாணத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் குறிப்பிடுகையில், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 230 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேஜிங் தலைநகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் வர்த்தக அலுவல்கள் தொடர்பான தலைமை அதிகாரி எலக்ஷி குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் பரவாத இடங்களில் உள்ள இலங்கையர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக தெரிவித்தார். Read more

கொரானா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றையதினம் சுகயீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த இரண்டு பேருக்கும் கொரொனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்து Read more

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி சி ஸிங் பிங் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால் சீனா கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. Read more