பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கமைய இங்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார். இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரதமரையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.