குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் அத் திணைக்களம் செயற்படவுள்ளது.