முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜனவரி 29ம் திகதிவரை நிறுத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின்போது இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக மேல்நீதிமன்றில் நடைபெறும் வழக்கினை நீதிபதி கிஹான் குலதுங்கவிடம் இருந்து மற்றுமொரு நீதிபதிக்கு மாற்றுமாறு குறித்த மனுவில் திலின கமகே கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், குறித்த மனு 29ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.