நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அலைபேசி குரல் பதிவுகள் தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.