சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் 176 பேர் நேற்று இரவு நாட்டுக்கு புறப்பட்டதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 484 மாணவர்களை நாட்டுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் கூறியுள்ளார். இதேவேளை, தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவர, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சீனாவுக்கான பதில் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.