Header image alt text

திருகோணமலை, இறக்கக்கண்டி கடற்கரையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கற்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

இந்த வெடிபொருட்கள் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கண்டெடுக்கப்பட்டுள்ளன. 20 வோட்டர் ஜெல் குச்சிகள், 4 பாதுகாப்பு ரவைகள் பின்னப்பற்றிருந்த நூல்கள், 2 மின்னை கடத்தாத டெடனேட்டர்கள் போன்றவையே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வீதிக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எஸ்.எப்.ஜி. 87 ரக கைக்குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக்குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுகள் யுத்த காலத்தில் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகிய இப்பேரணி, பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. Read more