இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக, கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இதனப்படையில் அவர் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய தரந்;ஜித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.