உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 26 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிரின் ப்ளோரிடா என்ற யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அவர் கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் கடந்த சனிக்கிழமை (01.02.2020) உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர் கொட்டாஞ்சேனை பகுதியில் தொழில்புரிந்து வந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.