இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் கமல் குணரத்விற்கும் இடையில் பாதுகாப்பு செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்களுக்கும் ஆயுட்காலம் வரை வேதனம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.