Header image alt text

ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டுஇலங்கை வந்தடைந்துள்ளார்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அதேபோல் சுதந்திரன தின நிகழ்வில் விசேட அதிதியாகவும் அவர் பங்கேற்கவுள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 26 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிரின் ப்ளோரிடா என்ற யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அவர் கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் கடந்த சனிக்கிழமை (01.02.2020) உயிரிழந்தார். Read more

வவுனியாவிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு – பொத்துவில் வரையான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் முதன் முதலாக சேவையில் ஈடுபட்டுள்ளன.

இ.போ.ச. வவுனியா சாலையின் ஏற்பாட்டில் பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி இச் சேவை நேற்றுமுன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலை 7.30மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு இரவு 9.45க்கு திருமலையை அடைந்து இரவு 10.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 06.00 மணிக்கு பொத்துவில் பஸ் நிலையத்தை அடையும். Read more