Posted by plotenewseditor on 5 February 2020
Posted in செய்திகள்
அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் இராணவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியுமென தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, ஆயுதங்களை கையளிக்காதோர் கைதுசெய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள இராணுவ ஊடக மய்யத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 12 திகதி வரையான பொது மன்னிப்புக் காலப்பகுதியில், இராணுவத்திலிருந்து முறையற்ற விதத்தில் விலகிச் சென்றவர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். Read more