சீனா வுஹான் நகரில் முதலில் பரவ ஆரபித்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 564 பேர் இறந்துள்ளதாகவும், 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் 3,323 பேர் கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை நேற்றையதினத்தில் மட்டும் 72 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை பிரித்தானிய மருத்துவர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இதனை விலங்குகளில் பரீட்சாத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.