முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், இன்று காலை கிளிநொச்சியினை சேர்ந்த 48 வயதுடைய பாலராசா ஜெதீஸ்வரன் என்ற விவசாயி தனது வயலினை அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் மற்றும் தடையவியல் பொலிஸார் ஆகியேர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.