ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். ஜெனரல் ஒலேக்வுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேநேரம், ரஷ்ய இராணுவ தளபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் நேற்றையதினம் சந்தித்துள்ளார்.