மட்டக்களப்பு, வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் வேறுவேறு பிரதேசத்தில் இருவர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்துள்ளதுடன் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு ஓட்டுமாவடியில் உள்ள பழைய இரும்பு கடையை விசேட அதிரப்படையின் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டபோதுஅங்கிருந்து 45 ஜெலினைற் குச்சிகள், 89 டெட்டனேற்றர்கள், 33 மீற்றர் வயர் போன்ற வெடிபொருட்களை மீட்டுள்ளதுடன் அந்த கடையின் 54 வயதுடைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை பொலிஸ் புலனாய்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை ஓட்டுமாவடி ஆலிம் வீதியிலுள்ள வீடு ஒன்றில் 2 ஜெலினைற் 1 மீற்றர் வயறும் மீட்கப்பட்டதுடன் 69 வயதுடையவர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.