முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இருந்து வியாபாரத்திற்கு என அபாயகரமான வெடி பொருட்களை எடுத்து வந்து கழட்டி விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் வகையான ஒரு குண்டு வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது குறித்த குண்டை கழட்டி கொண்டிருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தண்ணீரூற்று முள்ளியவளையைச் சேர்ந்த 42 வயதுடைய சூசைப்பிள்ளை புழேந்திரன் என்ற நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.