வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 800 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்காக, தெளிவூட்டும் நிகழ்வுகளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் முதித்த விதானபத்திரன கூறியுள்ளார்.