நேற்று குண்டுவெடிப்பு இடம்பெற்ற சிலாவத்தை வீட்டிலிருந்து மேலும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் பூட்டி இருந்த குறித்த வீடு பொலிஸார் சோதனை செய்த நிலையில் சுமார் மூன்று கிலோவுக்கு அதிகமான வெடிமருந்து பொருட்கள் வீட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் தொடர்ச்சியாக இந்த வெடிபொருட்களிலிருந்து மருந்துகளை பிரித்தெடுத்து வியாபாரம் செய்த ஒருவராக இருந்திருக்க வேண்டும் எனவும் இவ்வாறான நிலையிலேயே இன்றும் குண்டு ஒன்றிலிருந்து மருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட நிலையிலேயே குண்டு வெடித்து இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இந்த வெடி மருந்துகளுடன் சம்பந்தப்பட்ட இந்த வியாபாரத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் காயமடைந்த நபரின் தாயாரான குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றும் காயமடைந்த நபருடைய சகோதரனாகிய இருவரையும் கைது செய்திருந்தனர்.