மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டுவான் வயல் பகுதியில் 5 மிதிவெடிகளை விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வயல் பகுதியில் வைத்து மேற்படி மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் படையினரால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 மிதிவெடிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.