யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற பகிடிவதை மற்றும் அலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர் , யாழ். பல்கலைகழகம் முன்பாக இன்று (11) காலை குறித்த போராட்டத்தினை முன்னேடுத்தனர்.

அதன் போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் , பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.