ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.இன்று (14) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்த அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.